×

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பொதுமக்களின் இருப்பிடத்திற்கு பாதுகாப்பாக இருந்தது அதிமுக: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பேட்டி

சென்னை: தென் சென்னை மக்களின் இருப்பிடத்திற்கு பாதுகாப்பாக இருந்தது அதிமுக தான் என்று அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் கூறினார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் நேற்று முன்தினம் விருகம்பாக்கம் தொகுதியில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அதைத் தொடர்ந்து நேற்று மயிலாப்பூர் தொகுதிக்குப்பட்ட கோவிந்தசாமி தெருவில் பிரசாரம் மேற்கொண்டார். மேலும் அவர் வீடு, வீடாக நடந்து சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குசேகரித்தார். வேட்பாளரை ஆதரித்து மயிலாப்பூர் பகுதியில் நடிகை கவுதமி வாக்கு சேகரித்தார். அவருடன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் நிருபர்களிடம் கூறியதாவது: மயிலாப்பூர் கோவிந்தசாமி நகரில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி குடியிருப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவு வந்தபோது அதிமுக ஆட்சி இருந்தது. நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருந்தேன். அங்கு இருக்கக் கூடிய மக்களின் மனநிலையை நன்றாக புரிந்து கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இருப்பிடம் இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அந்த வழக்கை நடத்தி எந்த பிரச்னையும் இல்லாமல் அப்பகுதியில் இருந்த மக்கள் வசித்து வந்தனர். தென்சென்னை மக்களின் இருப்பிடத்திற்கு பாதுகாப்பாக இருந்தது அதிமுக தான்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பொதுமக்களின் இருப்பிடத்திற்கு பாதுகாப்பாக இருந்தது அதிமுக: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Jayavardhan ,South Chennai ,Parliamentary ,Constituency ,CHENNAI ,Dr. ,South ,Parliamentary Constituency ,J. Jayawardhan ,Virugambakkam ,
× RELATED தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் இடிதாங்கி பொருத்தம்..!!